மே 17ம் திகதியோடு விடைபெறுகிறார் மன்மோகன் சிங்!!

269

Manmohan

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மே 17ம் திகதி பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தனது பதவியை விட்டு விலகும் முன், வருகிற 17ம் திகதி நடைபெறவுள்ள பிரியாவிடையில் கலந்துகொண்டு, கடந்து 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்தது என்று மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

தனது உரையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டன என்பதை அவர் பட்டியலிடுவார் என்று தெரியவந்துள்ளது. மேலும் அன்றிரவு தனது சகாக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அவர் விருந்தளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.