பல ஆண் நண்பர்களுடன் நட்பாக பழகிய மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு!!

998


காரைக்குடியில்..



காரைக்குடியில் லாரி ஓட்டுநர் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் மனைவி தனது கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அடக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கொடுங்காவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவரது மகன் ஜெய பிரபு (36) காரைக்குடி சொந்தமாக லாரி ஒன்றை வைத்து போட்டி வந்தார்.





இந்த நிலையில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு தீபா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. தற்போது அவர்களுக்கு ஏழு வயது மகன் ஒருவர் உள்ளார். அவர் தனது மனைவி மகனுடன் காரைக்குடி பாண்டியன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.


இப்படி இருக்க அவரது மனைவி தீபா அடிக்கடி செல்போனை வைத்துக்கொண்டு அதில் அதிக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் அவர் பல ஆண் நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பழகி வந்ததாக கூறப்படுகிறது.


இதனை அறிந்த ஜெயபிரபு தனது மனைவியை அடிக்கடி கண்டித்துள்ளார். ஆனால் அவரது மனைவி தீபா கணவரின் பேச்சுக்கு செவி சாய்க்காமல் எப்போதும் போல அவர் சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடந்துள்ளார்.

அதனால் மன உளைச்சலில் ஜெயபிரபு கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி பாண்டியன் நகரில் உள்ள அவர் வசிக்கும் வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.


இந்த சம்பவம் குறித்து ஜெய பிரபுவின் மனைவி தீபா யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் உடலை கீழே இறக்கி தனது கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறி அவரது சடலத்தை அவரின் சொந்த ஊரான கொடுங்காவையில் கிராமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் ஜெயபிரபுவின் தந்தை ஆசீர்வாதம் மற்றும் உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்துள்ளனர். அடக்கம் செய்த ஐந்தாவது நாள் ஜெயப்பிரகுவின் 7 வயது மகன் தனது தாத்தாவிடம் தனது தந்தை வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்ததாகவும் அவரை தனது தாய் சில நண்பர்களின் உதவியுடன் சேர்ந்து கீழே இறக்கி கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனது பேரன் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசீர்வாதம் தன் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலினிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த புகாரை எடுத்து விசாரணை மேற்கொண்டதில் ஜெய பிரபுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் சூழல் உருவானது. தொடர்ந்து சிவகங்கை மருத்துவக் கல்லூரி பிரேத பரிசோதனை சிறப்பு நிபுணரும் உதவி பேராசிரியருமான டாக்டர் செந்தில்குமார் தலைமையில்,

வட்டாட்சியர் செல்வராணி காரைக்குடி எஸ்ஐ பூரண சந்திர பாரதி, ஜெய பிரபுவின் தந்தை ஆசீர்வாதம் ஆகியோர் முன்னிலையில் நடக்கும் செய்யப்பட்ட இடத்தில் ஜெயப்பிரபுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஜெய பிரபுவின் தந்தை ஆசீர்வாதம் கூறுகையில், தனது மகன் காரைக்குடியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனை தனது மருமகள் மறைத்து கணவன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாகவும்,

பின்னால் கொடுங்காவயல் கொண்டு வந்து அடக்கம் செய்து விட்டதாகவும் அதன் பின்பு தனது ஏழு வயது பேரன் சம்பவம் குறித்து தெரிவித்து தனது தாயும் அவரது நண்பர்களும் சேர்ந்து உடலை கீழே இறக்கி ஊருக்கு கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது சிவகங்கை முழுவதும் காட்டுத்தை போல பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.