வவுனியாவைச் சேர்ந்த நபர் கொழும்பில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து பலி!!

1738


கனகசபை ரஜித் நிலோசன்..



வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பில் பணியாற்றும் வேலைத்தளத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.



வவுனியா குட்செட் வீதியினை வதிவிடமாக கொண்ட 41வயதுடைய கனகசபை ரஜித் நிலோசன் என்ற நபர் கொழும்பில் தங்கியிருந்து மின்னிணைப்பு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.




வேலைத்தளத்தில் நேற்றையதினம் (08.12.2022) பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் மூன்றாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன்,


சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.