வவுனியாவில் மன்டூஸ் புயலின் தாக்கம் காரணமாக பப்பாசி செய்கை அழிவு!! 

692

புயலின் தாக்கம்..

மன்டூஸ் புயலின் தாக்கம் காரணமாக வவுனியாவில் 800க்கும் மேற்பட்ட பப்பாசிகள் அழிவடைந்துள்ளன.  இவ் அனர்த்தம் காரணமாக வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்த குளம்,



நெடுங்கேணி போன்ற பகுதிகளிலேயே பயிரிடப்பட்டு அறுவடை நிலையில் காணப்பட்ட 800க்கும் மேற்பட்ட பப்பாசி மரங்களே முறிந்து வீழ்ந்துள்ளதுடன்,

பலத்த காற்றின் காரணமாக வாழை மரங்கள் தென்னை மரங்கள் மற்றும் மரமுந்திரகை மரங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன. இதேவேளை வவுனியாவில் மன்டூஸ் புயலின் தாக்கம் காரணமாக 07 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன்,

09 குடும்பங்களை சேர்ந்த 29 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.