புகையிரத நடைமேடைக்கு இடையில் சிக்கிய மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

483

ஆந்திராவில்..

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிய மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.



மாணவியின் சிறுநீரகப் பைகள் கடுமையாக சேதமடைந்து ரத்தம் கசிந்துள்ளது மற்றும் அவரது உடலில் உள் உறுப்புகள் பதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அன்னவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சசிகலா (20). இவர் நாள்தோறும் தனது ஊரில் இருந்து கல்லூரிக்கு ரயில் மூலம் சென்று வந்துள்ளார்.

புதன்கிழமை (டிச. 7) விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள துவ்வாடா ரயில் நிலையத்தில் குண்டூர்- ராயகடா பாசஞ்சர் ரயிலில் பயணித்த மாணவி சசிகலா அதில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளார்.

அப்போது கால் தவறி விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்டார். மாணவியின் இடுப்பு பகுதி ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் மத்தியில் சிக்கிக்கொண்டது.

இதனை கவனித்த ரயில்வே பொலிஸார் மற்றும் சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்தினர். பின்னர் இரண்டு மணி நேரம் போராடி, பிளாட்பாரத்தை உடைத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி சசிகலா பரிதபாமாக உயிரிழந்தார்.

மாணவியின் சிறுநீரகப் பைகள் கடுமையாக சேதமடைந்து ரத்தம் கசிந்துள்ளதாகவும் இதில் உள் உறுப்புகள் பதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியின் எதிர்பாராத மரணம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.