அம்மா ஞாபகமாவே இருக்கு… 10ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய நெஞ்சை உலுக்கும் கடிதம்!!

666

தர்மபுரியில்..

தனது தாயார் இறந்த நிலையில், 6 வருடங்கள் கழித்து, அம்மா ஞாபகமாவே இருக்கு என்று மன அழுத்தத்தில் இருந்து வந்த 10ம் வகுப்பு மாணவர் குருபிரசாத், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலைச் செய் து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). பெயிண்டரான இவருக்கு தீபா என்ற மனைவியும், குருபிரகாஷ் (15), மனோ (14) என்ற 2 மகன்களும் இருந்தனர். இந்நிலையில் அவரது மனைவி தீபா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

ரமேஷ் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அத்திமூட்லு கிராமத்தில் வசித்து வருகிறார். மகன்கள் குருபிரகாஷ், மனோ ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முறையே 10 மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்தனர். மேலும் அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

குருபிரகாஷ், தனது தாயார் இறந்தது முதல் அவரது நினைவாகவே இருந்து வந்துள்ளார். மேலும் வார விடுமுறை நாட்களில் அத்திமூட்லு கிராமத்திற்கு சென்று வந்தார்.

கடந்த 10 நாட்களாக விடுமுறையில் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குருபிரகாஷ் பள்ளிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்து வந்தார். அவருடன் தங்கி படித்து வரும் மாணவர் ஒருவர் எதற்காக பள்ளிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருக்கிறாய் என கேட்டார்.

இந்நிலையில், மாணவர்கள் அனைவரும் இரவு விடுதியில் இருந்தனர். அந்த நேரம் தான் தனியாக படிக்க போவதாக கூறி குருபிரகாஷ் விடுதியில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். மற்ற மாணவர்கள் விடுதியில் இருந்த மற்ற அறைகளில் தூங்கினார்கள்.

நேற்று காலை குருபிரகாஷ் தங்கி இருந்த அறையின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் அந்த அறையின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது அங்கு இருந்த மின்விசிறியில் படுக்கை விரிப்பால் தூக்குப் போட்டு மாணவர் குருபிரகாஷ் தற்கொலை செய்திருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், இது குறித்து விடுதி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவம் தொடர்பாக ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு புகார் செய்தனர்.

புகாரின் பேரில் கலால் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

அவர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் கனகராஜ், தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணகுமார் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள்.

மாணவர் தங்கி இருந்த அறையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதை போலீசார் கைப்பற்றினார்கள். மாணவர் தற்கொலை தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.