வவுனியாவில் தொழிற்சங்க நடவடிக்கையினை மீறி மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ள உப அஞ்சல் அலுவலகம்!!

785

நெளுக்குளம் உப அஞ்சல் அலுவலகம்..

வவுனியாவில் தொழிற்சங்க நடவடிக்கையினை மீறி மக்கள் சேவைக்காக நெளுக்குளம் உப அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளமை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு வழங்கும் முகமாக வவுனியா பிரதான தபால் நிலையம் மூடப்பட்டள்ளது.

இதன் காரணமாக கடிதங்கள், பொதிகள் அனுப்ப வந்த மக்கள் மற்றும் முதியோர் கொடுப்பனவு பெறுவதற்கு வருகை தந்த முதியவர்கள் என பலரும் ஏமாற்றங்களுடன் திரும்பிச் சென்றிருந்தனர்.

எனினும் பொதுமக்கள் சிரமங்களுக்கு உள்ளாகக் கூடாது மற்றும் முதியோர் கொடுப்பனவு பெற வருகை தருபவர்களின் நலனை கருத்தில் கொண்டு நெளுக்குளம் உப அஞ்சல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டு சேவைகள் முன்னெடுக்கபடுகின்றமை மக்களிடையே வரவேற்பினை பெற்றள்ளது.