மாணவி போல வேடமிட்டு சென்ற பெண் போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்!!

537

மத்திய பிரதேசத்தில்..

கல்லூரியில் நடைபெறும் ரேகிங்கை தடுக்க 24 வயது பெண் போலீஸ் ஒருவர் மருத்துவ கல்லூரி மாணவி போல சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள மாகத்மா காந்தி மெமோரியல் மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், கல்லூரியில் ரேகிங் நடைபெறுவதாக புகார் அளித்தார்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அவற்றை தடுக்க முடியாத நிலையில், இரண்டு பெண் போலீஸ்கள் மாணவிகள் போலவும், ஒருவர் நர்ஸை போலவும், மேலும் 2 பேர் கேண்டீனில் பணியாற்றுபவர்கள் போலவும் மாறு வேடத்தில் சென்றனர்.

மாணவர்கள் இவர்களிடம் ரேகிங் செய்யவே, அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். இதில் 11 மாணவர்கள் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.