காதல்..
காதலுக்கு கண் இல்லை என் சொல்லுவார்கள். ஆனால் வயது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்துள்ள ஒரு சம்பவம் உங்களை ஆச்ச்ர்யத்தில் ஆழ்த்தும். காதல் வயப்பட்டால், அவர் வயது மற்றும் சாதியைப் பார்க்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
காதல் துணையிடம் தனது இதயத்தை தனது துணையிடம் ஒப்படைத்து அதன் மூலம் மகிழ்ச்சியை அடைகிறார். காதலர்களின் வயதில் பெரிய வித்தியாசம் இருந்தாலும், அவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. வயதானவர்கள் மிகவும் இளம் பெண்னை மணக்கும் சம்பவம் பல கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால், இந்த செய்தியை கேட்டதும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஒரு இளைஞன் தன்னை விட 31 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். அவன் காதலுக்கு வயது இல்லை என்று அடித்துக் கூறுகிறான்.
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், திருமண மேடையில் 21 வயது வாலிபர் ஒருவர் நிற்பதையும், அவருக்குப் பின்னால் ஒரு நாற்காலி இருப்பதையும் காணலாம். பொதுவாக திருமணங்களில் மட்டுமே காணப்படும் அலங்கார நாற்காலிகள் இருக்கின்றன.
இருவரும் கழுத்தில் மாலை அணிவித்துள்ளனர். உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா என்று ஒருவர் பையனிடம் கேட்கையில், அப்போது சிறுவன் ஆம் என்று பதிலளித்தான்.
அப்போது வீடியோ பதிவை செய்துள்ள நபர் அந்த வாலிபரிடம் வயது கேட்க, அவருக்கு 21 வயது என்றும், தான் திருமணம் செய்த பெண்ணுக்கு 52 வயது என்றும் கூறியுள்ளார்.
அப்போது எதிரில் நின்றவர்கள் அண்ணா, நீங்கள் செய்தது சரியா என்று கேட்கையில், அதற்கு சிறுவன், ‘காதலுக்கு வயதில்லை; வயது பார்த்து காதல் வருவதில்லை’ என்று பதிலளித்தான். காதல் உணர்வு என்பது எப்போது வேண்டுமானாலும், யாரை பார்த்தாலும் எழலாம் எனக் கூறினார்.
இந்த திருமணத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று வீடியோ பதிவு செய்த நபர் கேட்க, அதற்கு அந்த பெண் ஆம், நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
நான் என்னை விட அவரை அதிகமாக நம்புகிறேன். ஏனென்றால் நான் இவனுடன் மூன்று வருடங்கள் பழகி வருகிறேன் என்றார். இது குறித்து சிறுவன் மேலும் கூறுகையில்,
‘காதலுக்கு வயது இல்லை, இதயம் தான் தெரியும். ஒருவன் நல்லவனாக இருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியானவுடன், அது மிகவும் அதிகமாக வைரலானது. இந்த வீடியோவை அமித் சதுர்வேதி என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
வீடியோவைப் பகிரும் போது, ’அவருக்கு மாலை அணிவித்தவுடன் கலியுகத்தின் கடைசிக் கட்டம் தொடங்கியது’ என்ற தலைப்பில் அவர் இந்த வீடியோவை பகிர்த்துள்ளார்.
இந்த வீடியோ இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த வீடியோ எங்கிருந்து வந்தது என்று இந்த வீடியோவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.