வவுனியாவில் முதன் முறையாக சட்டக்கல்வி தொடர்பில் விசேட கருத்தரங்கு!!

474

சட்டக்கல்வி தொடர்பில் விசேட கருத்தரங்கு

வடமாகாணத்தில் முதல் தடவையாக சட்டத்திற்கோர் அறிமுகத்தை உருவாக்கி இன்றைய இளம் சமுதாயத்தினர் மத்தியில் எதிர்கால சந்ததியினருக்கான வாழ்வியல் சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் நோக்கமாகக் கொண்டு இக் கருத்தமர்வு நடைபெறவுள்ளது.

இக் கருத்தமர்வில் சட்டக்கல்வியின் அவசியம் , மனித உரிமைச் சட்டம் வாழ்வியல் சட்டம் போன்ற இச்சட்டங்களினை கற்பதன் ஊடாக எவ்வாறான நன்மைகளை பெறலாம் என்பதையும், எங்களை எந்தளவிற்கு பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என்பதுடன் சட்டக்கல்வியை கற்பதன் ஊடாக தொழில்சார் வேலைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் எமது நாட்டில் சட்டத்தின் தேவை எந்தளவிற்கு அத்தியாவசியமானது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

இவ் செயலமர்வில் கலந்து கொள்பவர்களுக்கு பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும். இக் கருத்தமர்வில் கலந்து கொள்ள விரும்பியவர்கள் தொடர்புகளுக்கு 0760970955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தவும் அல்லது IDM Nations Campus International, Regional Campus – North, Legal Studies Department , kurumankadu , Vavuniya என்ற முகவரிக்கு நேரில் சென்று பதிவுகளை மேற்கொள்ளவும்

விண்ணப்ப இறுதித்திகதி 17.12.2022 மாலை 7.30 மணிக்கு முன்பதாக பதிவுகளை மேற்கொள்ளவும்