தொழிலில் நஷ்டம்… மனமுடைந்த இளம் பெண் எடுத்த எடுத்த விபரீத முடிவு!!

416

திருச்சியில்..

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஃபேஷன் டிசைனராக இருந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே தாளக்குடி அம்மன் நகரை சேர்ந்த சண்முகவேல் என்பவரது மனைவி 36 வயதுடைய பத்மப்ரியா.



இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஃபேஷன் டிசைனரான இவர் திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பரிசுகள்,அலங்காரங்கள், பார்ட்டி மற்றும் கொண்டாட்டங்களில் அத்தியாவசியங்களைப் கிராப் செய்யுங்கள்

இந்த நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்படவே மனவேதனையில் இருந்து வந்த பத்மப்ரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பத்மப்ரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக பத்மபிரியா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமயபுரம் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.