வலுக்கட்டாயமாக மாப்பிள்ளை செய்த காரியம்.. பளார் என அறைந்த மணப்பெண்!!

516

மணமேடையில்..

திருமண நிகழ்வில் மணப்பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக இனிப்பு ஊட்டிய மாப்பிள்ளை தர்மஅடி வாங்கியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது. பொதுவாக திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கின்றது.

இந்நிகழ்வினை நினைவுகூறும் வகையில் புகைப்படங்கள் காணொளிகள் எடுத்து பத்திரமாக வைப்பதை அனைவரும் வழக்கமாக வைத்துள்ளனர். இங்கு கனவுகளுடன் மணமேடையில் நின்ற தம்பதிகள், கீழே இறங்கும் முன்பே அடிதடி சண்டையிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணமேடையில் நின்ற மணமகளுக்கு மாப்பிள்ளை வலுக்கட்டாயமாக இனிப்பை ஊட்டியுள்ளார். இதனால் வெறுப்படைந்த மணப்பெண் பளார் என அடித்துள்ளார். மேலும் இருவருக்கும் இடையே பெரிய கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.