பளையில் கோர விபத்து : ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு : பலர் படுகாயம்!!

796

கோர விபத்து..

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து இன்று(21.12.2022) மாலை 6.15 அளவில் கிளிநொச்சி பளையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த பேருந்தில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்ததாகவும் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் சேர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்.