இன்று (13.05) வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
வவுனியா ஆலயங்களில் முதல் முதலாக இவ் ஆலயத்திலேயே தேர்த் திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-கஜேந்திரன்-