இளம் பெண் மருத்துவர் படுக்கையறையில் சடலமாக மீட்பு : போலீசார் தீவிர விசாரணை!!

475

கேரளாவில்..

இளம் பெண் மருத்துவர் படுக்கையறையில் சடலமாக மீட்பு
இளம் பெண் மருத்துவர் ஒருவர் படுக்கையறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் கிளினிக் உரிமையாளர் டாக்டர். அரவிந்தனின் மகள் டாக்டர் அர்பிதா அரவிந்த் (30) தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

நேற்று இரவு, அகஸ்தியகோட்டில் உள்ள வீட்டின் படுக்கையறையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அர்பிதா, அரவிந்த், தேவிகா தம்பதியின் ஒரே மகள் ஆவார். எம்.பி.பி.எஸ் படிப்புக்குப் பிறகு பிஜியும் முடித்தார். இது குறித்து, அஞ்சல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.