காதலியை குளத்து நீரில் அழுத்தி கொன்ற காதலன் : உடலை குதறி தின்ற நாய், நரி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1773

ராமநாதபுரத்தில்..

காதலி கர்ப்பமடைந்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி காதலரிடம் தொந்தரவு செய்ய, காதலனோ குளத்து நீரில் காதலியை அழுத்தி கொலை செய்து விட்டு தப்பி இருக்கிறார். நாய், நரிகள் அந்தப் பெண்ணின் உடலை குதறி தின்றுருக்கின்றன.

மண்டையோடு மற்றும் உடல் எலும்புகளை போலீசார் மீட்டு உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டியில் நடந்திருக்கிறது இந்த சம்பவம். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் .

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாத்தியநேத்தல் கிராமத்தைச் சேர்ந்த வாசுகி என்ற இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். மாதவன் ஆட்டுக்கடை போடும் தொழில் செய்து வந்திருக்கிறார். வாசுகி எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார் .

தஞ்சை மாவட்டத்தில் செங்கிப்பட்டியில் சொந்தமான ஆடுகளை போடும் பணி செய்து வந்திருக்கிறார் மாதவன். அவ்வப்போது ஊருக்கு வரும்போது வாசுகி உடன் சந்தித்து பேசுவது வழக்கம்.

இதில் வாசுகி கர்ப்பமடைந்திருக்கிறார். அதனால் செங்கிப்பட்டிக்கு மாதவனை தேடிச்சென்று தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 20ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். பெற்றோர் யாரிடமும் சொல்லாமல் அவர் வெளியேறியிருக்கிறார். இதனால் மகளை காணவில்லை என்று அவரது தந்தை உடையார் கீழ தூவல் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் போஸ்டர் அடித்து விளம்பரம் செய்து தேடி வந்துள்ளனர்.

இதற்கிடையில் மாதவனை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதால் மாதவன் தனக்கு தொந்தரவாக கருதி அவரது அண்ணனுடன் சேர்ந்து செங்கிப்பட்டி சானிடோரியத்தில் இருந்து அயோத்தி பட்டைக்கு செல்லும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குளத்தில் வாசுகியை அழுத்தி கொலை செய்துவிட்டு சடலத்தை அப்படியே விட்டுவிட்டு வழக்கம்போல் கிடைபோடும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

போலீசார் தீவிரமாக தேடி வந்ததில், மாதவனை காதலித்தது தெரியவந்திருக்கிறது. இதனால் மாதவனை தேடி வந்தபோதுதான், வாசுகி எலும்புகள் கிடைத்துள்ளன. சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அந்த குளக்கரையில் மண்டை ஓடுகள் எலும்புகள் கிடந்துள்ளன.

போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது. அந்த எலும்புகளை வைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் நாய், நரிகள் சடலத்தை இழுத்து தின்று குதறி போட்டு இருக்கலாம். எலும்புகள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன என்பதை தெரியவந்ததை அடுத்து தடையவில்லை நிபுணர்கள் அந்த எலும்புகளை சேகரித்து உள்ளனர்.

பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அது காணாமல் போன வாசுகி என்பதும் மாதவன், திருக்கண்ணன் இருவரும் கொலையாளிகள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து இருவரையும் கைது செய்துள்ளனர்.