இனியும் தாங்க முடியாது : புதுமண தம்பதி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!!

290

இந்தியாவில்..

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பரபரப்பு பின்னணி வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ஹாவேரியை சேர்ந்தவர் விருபாக்ஷப்பா.

இவரது மனைவி பாரதி (40). இந்த தம்பதியின் மகன்கள் கிரண் (22), அருண் (21). கிரணுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவுஜன்யா (20) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இருந்தது.

அருணும், புட்டண்ணஷெட்டி என்பவரின் மகளும் காதலித்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கு புட்டண்ணஷெட்டி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 5 நாட்களுக்கு முன்பு அருணும், அவரது காதலியும் வீட்டில் இருந்து வெளியேறி கிராமத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் புட்டண்ணஷெட்டியும் அவரது உறவினர்களும் சேர்ந்து தங்களது மகளை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று கூறி பாரதியின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த துன்புறுத்தலை தாங்கமுடியாமல் பாரதியும், அவரது குடும்பத்தினரும் மனம் உடைந்தனர். இதையடுத்து பாரதி, கிரண், சவுஜன்யா ஆகிய 3 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.