மாணவியின் தலை முடியை வெட்டிய ஆசிரியைகள் கைது!!

362

A1

மாணவி ஒருவரின் தலை முடியை பலாத்காரமாக வெட்டிய சம்பவம் தொடர்பில் வத்தேகம பகுதி பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் 6ம் தரத்தில் கல்விப் பயிலும் மாணவி ஒருவரே பாடசாலை அறையில் வைத்து இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

தனது மகளின் எதிர்ப்பையும் மீறி ஆசிரியைகள் தலைமுடி வெட்டியதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியைகள் வத்தேகம நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு 25,000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.