மத்திய பிரதேச மாநிலம், மோரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி திவாரி 25. இவர் அங்குள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இளம்பெண்ணை காதலித்தார்.
அந்த பெண் திவாரியின் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து அந்த பெண்ணுக்கும், பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து கணவரின் வீட்டுக்கு சென்ற அந்த பெண் நேற்று முன்தினம், தன் பெற்றோரின் வீட்டுக்கு வந்திருந்தார்.
இதையறிந்த திவாரி, அங்கு வந்து, அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டார். பின் அவரும், துப்பாக்கியால் சுட்டு கொண்டார்.
இதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திவாரி அங்கு உயிரிழந்தார். இந்த சம்பவம், மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.