கண்ணீருடன் விடைபெற்ற மன்மோகன் சிங்!!

798

Manmohan

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் அலுவலக ஊழியர்கள் சுமார் 110 பேர், செளத் ப்ளாக்கில் எழுந்து நின்றபடி பிரியாவிடை கொடுத்தனர்.

நெகிழ்ச்சியான இந்த நிகழ்வின்போது, சிலரது விழிகளில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன என த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மே 17-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விடைபெறும் மன்மோகன் சிங்குக்கு இன்று பிரதமர் அலுவலக ஊழியர்கள் பிரியாவிடை கொடுத்தனர்.

பிரதமர் பதவியை 10 ஆண்டு காலமாக வகிக்கும் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் அலுவலகம் பிரியாவிடை வழங்கிய நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.

உங்கள் அனைவரின் பணிகளுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பார் என்று பிரதமர் அலுலக ஊழியர்களிடம் நெகிழ்ச்சியுடன் கூறினார் மன்மோகன் சிங்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை, ஊழியர்கள் சிலர் கண்ணீர் மல்க வழியனுப்பினர்.

அப்போது, பிரதமர் மன்மோகன் சிங்குடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முதன்மைச் செயலர் புலோக் சாட்டர்ஜி, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் மற்றும் பிரதமரின் ஊடக ஆலோசகர் பங்கஜ் பச்செளரி ஆகியோர் உடன் இருந்தனர்.