நடிகையை ஏமாற்றி பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி கைது!!

277

Abuse1

இந்தியாவின் மகாடாவில் வீடு கிடைக்க பரிகார பூஜை செய்வதாக, தொலைக்காட்சி நடிகையை ஏமாற்றி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய போலி மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் 26 இலட்சம் மோசடி செய்ததும் அம்பலமானது.

மும்பை சார்க்கோப் பகுதியை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் மகாராஷ்டிர அரசு கட்டிவரும் மகாடா குடியிருப்பில் வீடு வாங்க ஆசைப்பட்டு, அதற்கான விண்ணப்ப படிவத்தை அனுப்பி முடிவுக்காக காத்திருந்தார். ஆனால் நடிகைக்கு மகாடா குடியிருப்பில் வீடு கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஆன்மிக பூஜை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என பலர் கூறியதன் பேரில், கடந்த 2013 ஆம் ஆண்டு பகவான்தாஸ் என்ற மந்திரவாதியை சந்தித்தார். பூஜை செய்தால் மகாடா குலுக்கலில் உங்களுக்கு கட்டாயம் வீடு கிடைக்கும் என கூறி, மந்திரவாதி பகவான்தாஸ் 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு பூஜைகள் செய்தார். ஆனால் அடுத்த குலுக்கலிலும் தொலைக்காட்சி நடிகைக்கு மகாடா வீடு கிடைக்கவில்லை.

இதனையடித்து அவர் மாகிம் பகுதியை சேர்ந்த இப்ராகிம் அசிம்கான் என்ற மற்றொரு மந்திரவாதியை சந்தித்து அவரது உதவியை நாடினார். இதனையடுத்து மந்திரவாதி இப்ராகிம் அசிம்கான் சக்தி வாய்ந்த பரிகார பூஜை செய்தால் உங்களுக்கு குலுக்கலில் நிச்சயம் வீடு கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.

இதனை நம்பிய நடிகையிடம் இருந்து மந்திரவாதி இப்ராகிம் அசிம்கான் பூஜை செய்வதாக கூறி, பல்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.26 இலட்சத்தை பெற்றுக்கொண்டார். மேலும் பூஜை என்ற பெயரில் இப்ராகிம் அசிம்கான் கடந்த 2 வருடமாக நடிகையை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோம் செய்தார்.

இதற்கிடையில் 4வது முறையாக மகாடா அறிவித்த குலுக்கலிலும் நடிகைக்கு வீடு கிடைக்கவில்லை. இதனையடுத்து மந்திரவாதி இப்ராகிம் தலைமறைவு ஆனார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நடிகை கடந்த 9 ஆம் திகதி சார்க்கோப் பொலிஸ் நிலையத்தில் மந்திரவாதி இப்ராகிம் அசிம்கான் மீது புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்து போலி மந்திரவாதி இப்ராகிம் அசிம்கானை தேடி வந்தனர். இந்தநிலையில் மாகிம் தேவாலயம் அருகே உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று முன்தினம் போலி மந்திரவாதி இப்ராகிம் அசிம்கானை பொலிஸார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.