இலங்கைத் தமிழரை அகதிகளாக ஏற்கமுடியாது : இந்திய மத்திய அரசு!!

284

Ref

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவோரை அகதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இது தொடரபான செய்தியொன்றைப் பிரசுரித்துள்ளது. அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

இலங்கையில் அமைதி திரும்பியுள்ளதால், 2011ம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கைத் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்வதை இந்திய அரசாங்கம் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக மண்டபத்தில் உள்ள சிறப்பு பிரதி மாவட்ட ஆட்சியர் அலுவலம் தகவல் தருகையில், 2011ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் இருந்து வந்த எவரையும் அகதிகளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று இந்திய மத்திய அரசு தமக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் படகு மூலம் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த 10 இலங்கைத் தமிழ் அகதிகள், வெளிநாட்டவர்கள் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையிலேயே, இந்திய மத்திய அரசின் இந்த உத்தரவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.