துருக்கி நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 200ற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலி!!

286

Turnkey

துருக்கியின் மேற்கு பகுதியில் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெடிப்பு ஏற்பட்ட பின் மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக துருக்கி வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சுரங்கத்தில் சிக்குண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

787 பேர் இந்த சுரங்கத்தில் சிக்கியுள்ளதாகவும் மீட்பு படையினர் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர் எனவும் துருக்கி அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து விசாரணைக்கு துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் சுரங்கத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீப்பிடிக்க காரணம் என்று தெரியவந்துள்ளது.