வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் உள்ள கிணற்று நீர் நிலமட்டதுக்கு மேல் பொங்கி வழிந்த வண்ணம் உள்ளது. இந்த அதிசய நிகழ்வு கடந்த 10ம் திகதி மாலையில் இருந்து நடைபெறுகிறது.
இந்த கிணற்று நிர் ஆலய சூழல் எங்கும் சிந்திக் காணப்படுகிறது. கோவில் பிரதேசம் எங்கும் நீர் காணப்படுகிறது. இந்த அதிசயத்தை காண ஏராளமான மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் கூறும் போது இது வழமை என்று கூற முடியாது எனவும் இது தமது நிலைப்பாட்டில் அதிசயமாக உள்ளதாகவும், இதனை கடவுளின் அருளாக பார்ப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றன