“கொலை செய்வது எப்படி” கூகுளில் தேடி மனைவியை கொன்ற கணவன்!!

370

உத்தரப் பிரதேசதில்..

“கொலை செய்வது எப்படி” என்று கூகுளில் தேடிய பிறகு, தனது மனைவியைக் கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக உத்தரப் பிரதேச பொலிஸார் தெரிவித்தனர்.

இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசதில், காஜியாபாத்தில் உள்ள மோடிநகரில் வசிக்கும் விகாஸ், தனது மனைவி சோனியாவை திட்டமிட்டு கொலை செய்து நாடகமாடியதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

விகாஸ், வெள்ளிக்கிழமையன்று பொலிஸை தொடர்புகொண்டு, ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனது மனைவி சோனியாவிடம் யாரோ வழிப்பறி செய்வதாக கூறியுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சோனியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு, சந்தேகத்தின் பேரில் விகாஸைக் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விகாஸின் செல்போனைத் சோதனையிட்டதில், “கொலை செய்வது எப்படி” என்பது உள்ளிட்ட பல கிரிமினல் தனமான இணையத் தேடல்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

அவர் ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இருந்து விஷத்தை வாங்க முயன்றதும் மற்றும் துப்பாக்கியை எங்கிருந்து வாங்கலாம் என்று கூகிளில் தேடியதும் பொலிஸாருக்கு தெரியவந்தது.

திருமணமான சில ஆண்டுகளுக்குப் பிறகு, விகாஸின் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக்க கூறப்படுகிறது. இறுதியில் அவர் வெள்ளிக்கிழமை சோனியாவை திட்டமிட்டு கொல்ல செய்துள்ளார்.

விகாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது காதலியையும் விரைவில் கைது செய்வோம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை வெளிப்படுத்திய பொலிஸ் குழுவினருக்கு ₹25,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.