வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின்கீழ் உதவி!!(படங்கள்)

365

வவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றி கொந்தக்காரன் குளத்துக்கு செல்லும் ஆற்றுப்படுக்கை கடந்தகால போர் நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இராணுவ வேலிகள் பாதுகாப்பு அரண்கள் இவ்வாற்றுப்படுக்கைக்கு குறுக்காக உள்ளதும் நீண்டகால பராமரிப்பு இன்மையால் பற்றைக்காடுகள் மற்றும் மணல்திட்டுக்கள் மூடியுல்லதும் வரத்து நீர் தடைப்படுவதற்கான காரணங்கள் ஆகும். இதனால் கொந்தக்காரன்குளம் செட்டியூர்குளத்தின் கீழ் விவசாயம் செய்யும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு படுகை தூர்வாரப்படவேண்டியதன் அவசியத்தை வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ இ.இந்திரராசவின் கவனத்திற்க்கு கொண்டுவரப்பட்டதையிட்டு 12.05.2014 இல் அப்பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.கா.சுரேந்தின், திரு.மா.சுரோந்திரன் மற்றும் பிரதேச விவசாயிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழான வேலைத்திட்டத்தின் ஊடாக மேற்படி ஆற்றுப்படுக்கையை சீர் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

இதன் மூலம் நூறு ஏக்கருக்கு மேலான விளைநிலம் பாசண வசதி பெறுவதனூடாக தமது வாழ்வாதர உயர்ச்சிக்கு வழிவகுக்குமென மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது போன்ற பலநூறு சிறு குளங்கள் தூர்வாரப்படாது பாழடைந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும். என வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா தெரிவித்தார்.

1 2 3 4