வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.. சுவாரஸ்ய சம்பவம்!!

315

அமெரிக்காவில்..

தாயொருவர் இரட்டை குழந்தைகளை வெவ்வேறு ஆண்டுகளில் பெற்றெடுத்துள்ள சுவாரஸ்ய சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த காளி ஜோ ஸ்காட் என்ற பெண் கருவுற்று இருந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி பிரசவ வலி ஏற்பட உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நள்ளிரவிலேயே அவருக்கு குழந்தை பிறந்துவிடும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காளி ஜோ ஸ்காட் தனது முதல் பெண் குழந்தையான குழந்தையை டிசம்பர் 31 ஆம் திகதி நள்ளிரவு 11:55 மணிக்கு பெற்றெடுத்தார்.

சற்று நேரத்திலேயே அவருக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட சரியாக 6 நிமிட இடைவெளிக்கு பிறகு மேலும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் மூலம் தனது இரட்டை குழந்தைகளை வெவ்வேறு ஆண்டுகளில் அந்த பெண் பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதனை தொடர்ந்து, 2022ம் ஆண்டு பிறந்த முதல் பெண் குழந்தைக்கு அன்னி ஜோ எனவும், 2023ம் ஆண்டு பிறந்த மற்றொரு பெண் குழந்தைக்கு எஃபி ரோஸ் எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.

தங்களுக்கு வெவ்வேறு வருடத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியோடு தம்பதியினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். காளி ஜோ வெளியிட்டுள்ள அந்த பதிவில், குழந்தைகளை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்!

அவர்கள் இருவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் 5.5 பவுண்டுகள் எடையுடன் வெளியே வந்தனர். இதனால் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம் என்ற கூறியுள்ளார்.

தந்தை ஸ்காட் எனது பிள்ளைகள் தனித்துவத்துடன் முன்னோக்கிச் செல்லும் அம்சத்தை எனக்கு பிடித்துள்ளது என, பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த தம்பதிக்கும், இரட்டையர்களுக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.