யாழில் தனது வீட்டிற்கு தானே தீ வைத்த நபர் : இப்படியும் ஓர் சம்பவம்!!

713

யாழில்..

மனைவியுடன் முரண்பட்டு குடியிருக்கும் வீட்டினை தீ வைத்து கொளுத்தி சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் அச்சுவேலி அச்சுவேலி பாரதி வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் போதையில் வீட்டிற்கு வந்து , மனைவி, பிள்ளைகளுடன் சண்டையிட்டு, அவர்களை வீட்டின் வெளியே துரத்திய பின்னர் , வீட்டினை பூட்டி, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளார்.

அதன் பின்னர் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். வீட்டில் தீ பரவியதை அடுத்து அயலவர்கள் ஒன்று கூடி பலத்த சிரமத்தின் மத்தியில் தீயினை அணைத்த போதிலும் வீடு பகுதிகளவில் எரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.