வாய்க்காலில் கரை ஒதுங்கிய தாய், மகன் சடலம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

291


திருப்பூரில்..



வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் கீழ்பவானி வாய்க்காலில் கரை ஒதுங்கி உள்ளது. அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருங்கல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவருக்கு ரஞ்சிதம் (26) என்ற பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு இனியன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது.




அவர்களது மகன் இனியனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. அதனால் இனியனின் தாய் ரஞ்சிதம் மிகுந்த மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார்.


சம்பவத்தன்று ரஞ்சிதம் அவரது குழந்தை இனியனை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் அன்றைய தினம் வீட்டுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

அவரை அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் ரஞ்சிதம் மற்றும் குழந்தை குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதனால் உடனடியாக ஈஸ்வரமூர்த்தி குன்னத்தூர் காவல் நிலையத்தில் தனது மனைவி மற்றும் குழந்தை குறித்து காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.


அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் குழந்தையையும் மனைவியையும் ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஈஸ்வரமூர்த்தியின் உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த குருமந்தூர் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் ரஞ்சிதத்தின் துணிகள் மற்றும் செருப்பு கிடந்துள்ளது. அதனைக் கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் கீழ்பவானி வாய்க்காலில் ரஞ்சிதம் மற்றும் இனிய உறவினர்கள் தேடி வந்தனர். அப்போது ஈரோடு அடுத்த வெள்ளோடு அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குழந்தை இனியனின் உடல் மிதந்து வந்துள்ளது.

அது பற்றிய தகவல் வெள்ளோடு காவல்துறையினருக்கு கிடைக்கப்பட்டது. உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இனியனின் உடலை நீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இது ஒரு புறம் இருக்க கோபிசெட்டிபாளையம் அடுத்த சின்னகுளம் கீழ்ப்பவானி வாய்க்காலில் தாய் ரஞ்சிதத்தின் உடல் மிதந்து வந்துள்ளது. அதனைக் கண்ட மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பூர் இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் ரஞ்சிதத்தின் உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில் ரஞ்சிதம் தனது குழந்தையுடன் கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை அடுத்து ரஞ்சிதம் மற்றும் இனியனின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரஞ்சிதம் மற்றும் ஈஸ்வரமூர்த்திக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் கோபிசெட்டிபாளையம் ஆர் டி ஓ பிரியதர்ஷினி தலைமையில் இன்று விசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.