திருமணமாகி ஒரு ஆண்டிற்குள் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

316

தூத்துக்குடியில்யில்…

தூத்துக்குடி வரதட்சணை கொடுமை காரணமாக திருமணம் ஆகி ஒரு ஆண்டிற்குள் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெரு பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட். இவரது மகள் அனிஷா. பட்டதாரரியான அனுஷாவிற்கும், தூத்துக்குடி லயன் ஸ்டவுன் பகுதியை சேர்ந்த குவைத்தில் வேலை செய்யும் பிரசாத் என்பவருக்கும், கடந்த 2022 ஜனவரி மாதம் 20ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்திற்காக பிரசாத் அவரது குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் 100 பவுன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் ரொக்கம் கேட்டுள்ளனர். இதில் கில்பர்ட் தனது மகளுக்கு 70 பவுன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். மீதி 30 பவுன் நகையை சில மாதங்களில் போடுவதாக கூறியுள்ளார்.

இதை அடுத்து, நகையை முறையாக போடாததால் அனிஷாவை பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சனை கொடுமை செய்துள்ளனர். மேலும், அனிஷாவை கடந்த ஓராண்டாக தனது தாய் வீட்டிற்கு அனுப்பாமலும் இருந்துள்ளனர்.

செல்போனில் மற்றவருடன் தொடர்பு கொள்ள முடியாதபடி செல்போனை லாக் செய்துள்ளனர். அனிஷாவிற்கு பிரசாத்தின் குடும்பத்தினர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும் அனிஷாவின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

குவைத்தில் வேலை பார்க்கும் பிரசாத் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூத்துக்குடி வந்துள்ளார். நேற்று தனது மனைவியுடன் மீண்டும் நகை பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை அணிஷாவின் தந்தை கில்பர்ட்டிருக்கு பிரசாத் போன் மூலம் உங்களது மகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர். இதைஅடுத்து மருத்துவமனைக்கு கில்பர்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றுள்ளனர். அங்கே உங்களது மகள் இறந்து விட்டாள் என பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மகளை இழந்த கில்பர்ட் தனது மகளை வரதட்சணை கொடுமை காரணமாக, பிரசாத் மற்றும் அவரது தந்தை தாய் மற்றும் குடும்பத்தினர் கொலை செய்து விட்டதாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைஅடுத்து, தென்பாகம் காவல்துறையினர் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் திருமணம் ஆகி ஒரு ஆண்டிற்குள் இளம்பெண் மர்மமான முறையில் இறந்துள்ளதால் தூத்துக்குடி ஆர்டிஓ இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தூத்துக்குடியில் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.