வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இலங்கையின் படைவீரர் ஒருவர் உட்பட்ட 11 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் 6 தமிழர்களும் 5 சிங்களவர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் இன்று காலை வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.