யாழில் பட்டப்பகலில் சினிமா பாணியில் இடம்பெற்ற விபரீத சம்பவம்!!

971


யாழில்..



யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பட்டப் பகலில் திரைப்பட பாணியில் வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்திய பின்னர் கும்பல் ஒன்றினால் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டதில் நால்வர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாகம் பகுதியில் மகிழுந்தில் பயணித்த நபர் மீது பட்டா ரக வாகனத்தில் பயணித்த பிறிதொரு குழுவினர் மோதி விபத்தை ஏற்படுத்தினர். இதனையடுத்து அவர் மீது வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




அதேவேளை யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


இதனையடுத்து குறித்த பகுதியில் காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.