வவுனியா தரணிக்குளம் ஆரம்ப பாடசாலையில் புலமைப்பரீட்சையில் 07 மாணவர்கள் சித்தி

1008

வவுனியா தரணிக்குளம் ஆரம்ப பாடசாலையில் புலமைப்பரீட்சையில் 07 மாணவர்கள் சித்தி

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தரணிக்குளம் ஆரம்ப பாடசாலையில் புலமைப்பரீட்சையில் 07 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 07 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 100 புள்ளிகளுக்கு மேல் 23 மாணவர்களும் , 70 புள்ளிகளுக்கு மேல் 28 மாணவர்களும் பெறுபெற்றை பெற்றுள்ளனர். அத்துடன் 70புள்ளிகளுக்கு கீழ் எந்தவொரு மாணவரும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்

பெறுபேற்றினை வீகிதம் அடிப்படையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 25வீகிதமும் 100 புள்ளிகளுக்கு மேல் 82 விகீதமும் 70 புள்ளிகளுக்கு மேல் 100 வீகிதமுமாக அமைந்துள்ளது.

மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி செல்வதேவன் புஸ்பவதி அவர்களிற்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் , வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளை பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.