வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 73 மாணவர்கள் சித்தி

1240

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 73 மாணவர்கள் சித்தி

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 73 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 73 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 100 – 141 புள்ளிகளுக்கிடையே 96 மாணவர்களும் , 70 – 99 புள்ளிகளுக்கிடையே 21 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு கீழ் 4 மாணவர்களும் பெறுபெற்றை பெற்றுள்ளனர்.

புலமைப்பரீட்சைக்கு 194 மாணவர்கள் தோற்றியிருந்தமையுடன் அவற்றில் 190 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளனர். சித்தி விகீதம் 98 விகிதமாக காணப்படுகின்றது.

கடந்த வருடத்தை விட சகல வடிவங்களிலும் அதிகரிப்பை ஏற்படுத்த பாடுபட்டு உழைத்த வகுப்பாசிரியர்கள் பிரதியதிபர் (ஆரம்பபிரிவு) மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு விசேட வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள் பழைய மாணவர் சங்கத்தினர் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.