வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் புலமைப்பரீட்சையில் 31 மாணவர்கள் சித்தி

1231


வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் புலமைப்பரீட்சையில் 31 மாணவர்கள் சித்தி



புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் புலமைப்பரீட்சையில் 31 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 31 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 100 – 141 புள்ளிகளுக்கிடையே 116 மாணவர்களும் , 70 – 99 புள்ளிகளுக்கிடையே 136 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு கீழ் 4 மாணவர்களும் பெறுபெற்றை பெற்றுள்ளனர்.  புலமைப்பரீட்சைக்கு 140 மாணவர்கள் தோற்றியிருந்தமையுடன் சித்தி விகீதம் 97 விகிதமாக காணப்படுகின்றது.



மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர் , அதிபர் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் , வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.



இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.