வவுனியா தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 4 மாணவர்கள் சித்தி

965

வவுனியா தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 4 மாணவர்கள் சித்தி

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரீட்சையில் 4 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 100 – 141 புள்ளிகளுக்கிடையே 11 மாணவர்களும் , 70 – 99 புள்ளிகளுக்கிடையே 4 மாணவர்களும் பெறுபெற்றை பெற்றுள்ளனர். மேலும் பரீட்சைக்குத் தோற்றிய 19 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். சித்தி விகீதம் 100 விகிதமாக காணப்படுகின்றது.

இவ்வெற்றியைப் பெற்றுத் தந்த மாணவச் செல்வங்களை வாழ்த்துவதுடன் இம்மாணவர்களை சிறப்பாக வழி நடாத்திய வகுப்பாசிரியை திருமதி சாஜினா ஜாஹிர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் இம்மாணவர்களின் வெற்றிக்கு அனைத்து வகையிலும் உதவிய பெற்றோருக்கும் மனமார்ந்த நன்றிகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.