வவுனியா அனைத்து பல்கலைகழக மாணவர் அபிவிருத்திச் சங்கமானது (AUSDAV) “மாணவர்களின் கல்வி நிலையை கண்டறிதலும் அதனை மேம்படுத்தலும்” என்ற தொனிப்பொருளின் கீழ் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள கணித, உயிரியல் மற்றும் வர்த்தக பிரிவு மாணவர்களுக்கு வருடம் தோறும் இலவசமாகப் நடாத்தும் முன்னோடிப் பரீட்சை இவ்வருடம் மூன்றாம் முறையாக வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய 4 மாவட்டங்களில் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 19/05/2014 – 24/05/2014 காலப்பகுதிக்குள் நடாத்தப்படவுள்ளது.
வர்த்தக பிரிவு பரீட்சை வவுனியா மாவட்டத்திலும் கணித, உயிரியல் பிரிவு பரீட்சை மேற்கூறிய அனைத்து மாவட்டங்களிலும் நடாத்தப்படவுள்ளது. அத்துடன் மாணவர்களுக்கு பரீட்சையில் செய்த பிழைகளை கண்டறிந்து திருத்துவதக்காக பரீட்சை மதிப்பிடல் திட்டமும் கொடுக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் இப் பரீட்சையானது உயர்ந்த பெறுபேறுகளை பெறுவதற்கு உதவியதாக ஆசிரியர்களும் மாணவர்களும் குறிப்பிட்டமை இப் பரீட்சை நடாத்தபடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக வவுனியா அனைத்து பல்கலைகழக மாணவர் அபிவிருத்திச் சங்க தலைவர் தெரிவித்தார்.