சுவிஸில் இலங்கைத் தமிழர்களான தந்தைக்கும் மகனுக்கும் நடந்த பரிதாபம்!!

597

சுவிட்சர்லாந்தில்..

சுவிட்சர்லாந்தில் நடந்த கார் விபத்தில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இலங்கையின் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாக கொண்டவர்கள் தனபாலசிங்கம் கண்ணன் (69) மற்றும் கண்ணன் சுரேஷ் (34). இருவரும் தந்தை மற்றும் மகன் ஆவார்கள்.

இருவரும் சுவிஸ்லாந்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கார் விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மகன் உயிரிழந்த நிலையில், தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் அவர்கள் சென்ற கார் பலத்த சேதமடைந்து நொறுங்கியது வெளியான புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.