இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமான இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை : கதறியழும் பரிதாபம்!!

515

இன்ஸ்டாகிராமில்..

இன்ஸ்டாகிராமில் ஆடல் பாடல் செய்து பதிவேற்றி பிரபலமானது பிரிக்யாவின் குடும்பம். இந்த பெண்ணின் தாயார், அண்ணன் அவ்வப்போது தந்தை உள்ளிட்ட பலரும் இவர்களது வீடியோவில் வலம் வருவார்கள்.

முன்னதாக பிரிக்யாவின் தாயார், “என் மகளுக்கும் மகனுக்கும் பாரபட்சமின்றி ஒரே மாதிரி செல்லம் கொடுத்து வளர்த்தேன். எங்கள் குடும்பத்தினரிடம் பலரும் சரிவர பேசுவதில்லை. உறவினர்கள் பிணைப்பில் இல்லை. என்னுடைய கோடீஸ்வர தம்பி கூட பேசுவதில்லை.

இந்த நிலையில் எங்களுடைய மகளுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஒரு வருட காலமாக மகளுக்கும் மருமகனுக்கென்றும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்தோம். மகளும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார்.

அவருக்கு மாப்பிள்ளையை பிடித்திருந்தது. இருவரும் பல இடங்களுக்கு சேர்ந்து சென்று வந்தனர் . இருவரும் சேர்ந்து கூட ரீல்ஸ் வீடியோக்களைச் செய்தனர். ஆனால் இதனிடையே யாரோ என் மகளை ஏன் உடனடியாக திருமணம் செய்கிறீர்கள்?

நீங்கள் இன்னும் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் என்பது போல் சொல்லி குழப்பி விட்டிருக்கிறார்கள் போல தெரிகிறது, இதனால் அவள் திருமணம் வேண்டாம் என சொல்லிவிட்டு, அவளும் என் கணவரும் எங்களை பிரிந்து சென்றுவிட்டனர்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் பிரத்தியேக பேட்டி அளித்த பிரக்யா, “அந்த சமயத்தில் எனக்கு அப்பா சப்போர்ட்டும் இல்லை, அண்ணனோ அம்மாவின் நம்பிக்கையை சம்பாதித்த, அவரை தன் கைக்குள் வைத்திருந்தான்.

என்னை அவ்வளவு லவ் பண்ணியிருந்ததாக சொல்லும் அம்மாவுக்கு என் முகம் வாட்டமாக இருந்தது கூட புரியவில்லையா? திருமணத்துக்கு மாப்பிள்ளை வீட்டார் முன்பு நான் ஓகே சொல்லவில்லை என்றால், என் அம்மா உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றார்.

இதையெல்லாம் நிச்சயதார்த்த வீடியோவில் கூட பார்க்க முடியும். அந்த நிச்சயதார்த்தமே எனக்கு பிடிக்கவில்லை என்கிற சோகத்தில் தான் நின்றுகொண்டிருந்தேன். பிறகு அப்பா என்னை கவனித்து புரிந்துகொண்டார்” என கூறியுள்ளார்.

மேலும் தனக்கு நிச்சயம் பண்ணப்பட்ட நபர் குறித்து பேசும்போது, நான் இந்த டிரெஸ் தான் போட வேண்டும் என நிர்ப்பந்திப்பான், அத்தனை பேர் முன்னிலையும் சீரியஸாக இப்படி பேசுவான்.

அவனுடைய மைண்ட் செட்டே, என்னோடு இருந்து என்னை வைத்து ரீல்ஸ் வீடியோ போட்டு புகழ் அடைய வேண்டும் என்பதுதான். அவனுக்கு லவ் என்றாலே என்னை தொட்டு பேசுவதும், பிசிக்கலாக இருப்பதுமாகவே இருந்தது. அதை கண்டுபிடிச்சுட்டேன்.” என்று தெரிவித்துள்ளார் .

மேலும் பேசிய பிரிக்யா தனது தந்தை வீட்டில் இயல்பாக ட்ரவுசருடன் இருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை தம்முடைய அம்மா பதிவேற்றிவிட்டதாகவும், உண்மையில் தன்னுடைய நண்பர்கள் எல்லாம் பேசும் பொழுது, “பெற்ற மகளே தவறு செய்து இருந்தாலும் ஒரு அம்மா மூடி மறைக்க தான் பார்ப்பார்கள்,

ஆனால் தவறே செய்யாத பெண்ணை இப்படி கஷ்டப்படுத்துகிறார்களே” என்றெல்லாம் சொல்வதாக கூறி வருந்துகிறார். அத்துடன், “அந்த குடும்பத்தையும் அம்மாவையும் உண்மையில் நான் மிஸ் பண்ணவே இல்லை. அந்த குடும்பம் இல்லாமல் நான் நிம்மதியாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.