உத்தரகாண்ட்டுக்கு உதவி செய்யாத இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்கள் ..

420

sehwag-dhoni-sachin

சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா 1 கோடியை வாரி வழங்கிய பி.சி.சி.ஐ., உத்தரகண்ட் வெள்ள நிவாரணத்துக்கு எவ்வித நிதியும் வழங்காதது மக்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திகழ்கிறது. கடந்த 2010-11ல் இதன் ஆண்டு வருமானம் 868 கோடி. ஐ.பி.எல்., தொடரின் ஒளிபரப்பு உரிமம் மூலம் 10 ஆண்டுகளுக்கு (2008-2017) 8 ஆயிரத்து 700 கோடி சம்பாதிக்கிறது.

இப்படி கோடிகளில் புரளும் பி.சி.சி.ஐ., சமீபத்தில் சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா 1 கோடி, அணியில் இடம் பெற்ற மற்ற ஊழியர்களுக்கு தலா 30 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

மற்றும் எம்.பி.,க்களுக்கு கட்டப்பட்டுள்ள கிளப்பில் நீச்சல் குளம் அமைக்க பெரும் தொகையை நிதியாக வழங்கியது. ஆனால், பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியான உத்தரகண்ட் மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ஒரு சிறிய தொகை கூட வழங்கவில்லை.

இந்திய அணி வீரர் ஷிகர் தவான் கூட, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் வென்ற தங்க மட்டை விருதை, உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணித்தார். ஹர்பஜன் சிங் ரூ. 10 லட்சம் வழங்கினார். வசதியே இல்லாத ஹொக்கி இந்தியா அமைப்பு 10 லட்சம் வழங்கியது.

சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவிக்கும் பி.சி.சி.ஐ மட்டும் எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளது. ஐ.சி.சி., கூட்டத்தில் தற்காலிக தலைவர் டால்மியா பங்கேற்பாரா ஒதுங்கி இருக்கும் சீனிவாசன் கலந்து கொள்வாரா என்று தனது உள்விவகாரத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டுள்ளது.

பி.சி.சி.ஐ நிதி வழங்காதது குறித்து சமூகவலைதளமான டுவிட்டரில் ஏராளமானோர் விமர்சித்துள்ளனர்.

இதே போல டோனி, சச்சின், கம்பீர், ஷேவாக் உள்ளிட்ட கோடீஸ்வர கிரிக்கெட் வீரர்களும் தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.