வவுனியா சிறைச்சாலையில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெண் கைதி ஒருவர் உட்பட ஐவர் விடுதலை!!

650

ஐவர் விடுதலை..

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதி ஒருவர் உட்பட ஐவர் விடுதலை செய்யப்பட்டனர்.



75 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் சிறைக்கைதிகள் இன்று (04.02.2023) விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து ஒரு பெண் கைதி மற்றும் நான்கு ஆண் கைதிகள் என ஐந்து கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

கைதிகளை விடுவிக்கும் நிகழ்வில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார், பிரதான சிறைச்சாலை பிரதாணி சந்திரசிறி உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என்பவர்கள் பங்குபற்றியிருந்தனர்.