வவுனியாவில் சிங்கள யுவதியிடம் அங்க சேஷ்டை செய்த மாணவன் கைது!!

340

A6

வவுனியாவில் சிங்கள யுவதி ஒருவரிடம் அங்க சேஷ்டை செய்த மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்..

பௌத்த மக்களின் பண்டிகைகளில் ஒன்றாகிய வெசாக் தினம் கடந்த இரண்டு தினங்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் போது வெசாக் தினத்தை பார்வையிடச் சென்ற சிங்கள இளம் பெண் ஒருவர் கண்டிவீதியில் உள்ள பிரதான பன்சாலைக்கு முன்னால் சன நெருசலுக்குள் சிக்கிய வேளை அப் பெண்ணிடம் அங்க சேஷ்டை செய்த 18 வயது மாணவன் ஒருவன் அருகில் இருந்தவர்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட குறித்த மாணவன் இன்று வவுனியா நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.