சிவபெருமானை மணந்த இளம்பெண் : சுவாரஸ்ய சம்பவம்!!

624

மத்தியப் பிரதேசத்தில்..

மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் நடந்த ஒரு வித்தியாசமான திருமணம் பேசுபொருளாக மாறியுள்ளது. எம்பிஏ பட்டதாரியான நிகிதா சௌராசியா என்பவர்,

தனது குடும்பத்தினர் முன்னிலையில் சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். பிரம்மகுமாரி ஆசிரமத்தில் மஞ்சள் நீராட்டு விழா செய்துவிட்டு, கல்யாண மண்டபத்தில் உள்ள பரமேசுவரருக்கு மாலை அணிவித்து,

ஏழு முறை வலம் வந்து சங்கரரைக் கணவனாக ஏற்றுக்கொண்டார். தற்போது இந்த திருமண விழா அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.