சென்னையில்..
சென்னை புழல் லட்சுமிபுரம் அசோகர் தெருவில் வசித்து வருபவர் 22வயதான சுதாசந்தர்.இவர் கண்ணாடிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஜனவரி 31ம் தேதி சுதாசந்தர் பைக்கில், தன் கள்ளக்காதலியுடன் ரெட்டைஏரி கல்பாளையம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சுதாசந்தரை வழிமறித்து அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த சுதாசந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடன் பைக்கில் வந்த ராகிணியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் தகாத உறவால், இந்த கொலை நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விடுத்த செய்திக்குறிப்பில் “சுதாசந்தர் ராகிணியுடன் தவறான உறவில் இருந்து வந்தார். இதில் ராகினிக்கு வயது 25.
ராகினிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இவர்களின் கள்ள உறவு, ராகிணியின் கணவருக்கும், அவரது அண்ணன்களான உதயா, பரத் என்ற ராபினுக்கும் தெரியவந்துள்ளது. இதனால் ராகினியை கண்டித்துள்ளனர்.
ஆனாலும் இருவரும் அவர்களின் தவறான உறவை துண்டித்துக் கொள்ளவில்லை. இதனால் கடந்த 3 மாத காலமாகவே கணவருடன் சண்டை போட்டு விட்டு அண்ணன் வீட்டில் ராகினி இருந்து வந்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறி, சுதாசந்தருடனேயே போய் தங்கி விட்டார். ரெட்டை ஏரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ராகினி சுதாசந்தருடன் வசித்து வந்தார்.
இது அவருடைய சகோதரர்களுக்கு சுதாசந்தர் மீதான ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது. இதனாலேயே சுதாசந்தரை கொலை செய்ய முடிவு செய்தனர்.
திட்டமிட்டபடியே ராகிணியுடன் வந்த சுதாசந்தரை, அந்த கும்பல் கள்ளிப்பாளையம் அருகே கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாக ராகினி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், கொலையாளிகள் வந்த ஆட்டோ நம்பரை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆட்டோ டிரைவர் கார்த்திக் ஆவடியில் வசித்து வந்த சுதாசந்தர், லட்சுமி புரத்திற்கு வந்து 2 மாதம் தான் ஆகிறதாம்.
அதற்குள் அந்த பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டது. விசாரித்ததில் இருவரும் பள்ளிக்காலத்திலிருந்தே காதலர்கள். இவர்களது காதல் விவகாரம் ராகிணி வீட்டுக்கு தெரிந்து கண்டித்துள்ளனர். கேட்காததால் அவசர அவசரமாக உறவினர் வசந்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆனாலும், காதலனை மறக்க முடியாமல் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார் ராகினி. இந்த விஷயம் தெரிந்து மொத்த குடும்பமும் ஆத்திரப்பட்டுள்ளது.
தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையையும் விட்டுவிட்டு, சுதா சந்தருடன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தும் அளவுக்கு துணிந்துவிட்டதால் அவர்கள் ஆத்திரத்தில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
இந்த கொலையில் ஆட்டோ டிரைவர் கார்த்திக் , ராகிணியின் அண்ணன்கள் பரத் (எ) ராபின் , உதயா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் சேர்ந்து வீடு எடுத்து வசித்து வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.