வீட்டுக்கு தெரியாமல் சென்று காதலர் தினம் கொண்டாடிய இளம் ஜோடிக்கு நடந்த விபரீதம்!!

464

பெங்களூருவில்..

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் காதலர்கள் சந்தித்து காதலர் தினத்தை, முத்தம் கொடுத்து பகிர்ந்துகொண்டனர். இதனால் பல இடங்களில் காதலர்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி காணப்பட்டனர்.



அந்த வகையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த காதல் ஜோடி விபு சர்மா (27), சுப்ரியா துபே (26) ஆகியோர் காதலித்து வந்தனர். விபு டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர்.

இருவரும் காதலிப்பது அவர்களது பெற்றோருக்கு தெரியாது. எனினும் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். இதனையடுத்து , காதலர் தினத்தை கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன் விபு சர்மாவும், சுப்ரியா துபேவும் கோவா சென்றுள்ளனர்.

அவர்கள் கோவாவில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களை சுற்றிபார்த்தனர். இந்நிலையில், காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அதற்கு முன்தியநாள் நள்ளிரவு முதல் காதல் ஜோடி கோவாவின் பலோலம் கடற்கரையில் சுற்றி திரிந்துள்ளனர்.

அப்போது எதிராராத விதமாக கடலில் எழுந்த பெரும் அலையில் சிக்கி இருவரும் கடலில் மூழ்கினர். இதனை அங்கிருந்த காதலர்கள் பார்த்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் கடலில் மூழ்கிய 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், 2 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.