தமிழ் தொலைக்காட்சித் தொடர் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!!

671

விஜய் டிவியில்..

‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் நடிகர் ஹரி இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹரியின் திடீர் தற்கொலை ரசிகர்களையும், விஜய் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. திரைப்படத்திற்கு நுழைவதற்கு விசிட்டிங் கார்ட்டாகவே விஜய் டிவியின் தொடர்கள், நிகழ்ச்சிகள் உள்ளதால், ரசிகர்களிடையேவும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

கடந்த சில வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். அப்படி அதிகம் ரசிகர்களைக் கவர்ந்த சீரியல்களில் ஒன்றான ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில், ஹரி என்பவர் நடித்து வந்தார்.

இந்நிலையில், இவர் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.