யாழில்..
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி, முடங்குதீவு பகுதியில் திடீரென சிவலிங்கமொன்று பிரதிஷ்டையாகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த சிவலிங்கம் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் இரவு குறித்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதி ஊடாக பயணிப்போர் வாகனங்களில் இருந்து இறங்கி சிவலிங்கத்திற்கு பூ வைத்து, கற்பூரம் ஏத்தி, தேங்காய் உடைத்து வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது.