வவுனியா இறம்பைக்குளம் தேசிய மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வினைத்திறன் கண்காட்சி -2014!!(படங்கள்)

350

வவுனியா இறம்பைக்குளம் தேசிய மகளிர் கல்லூரியில் இன்று(22.05) ஆரம்ப பிரிவு மாணவர்களின் வினைத்திறனை வெளிபடுத்தும் விதத்தில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பங்களிப்புடன் கண்காட்சி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் ஆரம்ப பிரிவு அதிபர் கு.முல்லைகுமார் தலைமையில் இடம் பெற்றது.

மேற்படி நிகழ்வில் திரு ஐ.தவரட்ணம்(பிரதிக் கல்விப்பணிப்பாளர், கல்வி அபிவிருத்தி வவுனியா தெற்கு கல்வி வலயம் ) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா உபதிபர்கள் மற்றும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் மாணவர்களினால் உருவாக்கப்பட்ட கண்காட்சி பொருட்கள் கண்களை கவரும் விதத்தில் அமைந்திருந்ததாக நிகழ்வில் கலந்து கொண்ட தரப்பினர் தெரிவித்தனர்.

-பண்டிதர்-

11 12 13 14 15 16 17 18 19 20 21