மாணவர்களின் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சோகப் பின்னனி!!

891

வெலிப்பன்னையில்..

வெலிப்பன்னையில் இளம் குடும்பஸ்தரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மூன்று மாணவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை மாகொல புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



உயிரிழந்தவர் மத்துகம – குருதிப்பிட்ட பிரதேசத்தில் வசித்து வந்த ரங்கவிராஜ் ஜயசிங்க என்ற 34 வயதுடையவர் ஆவார். வீதியில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மாணவர்கள் தலைக்கவசத்தால் குடும்பஸ்தரை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள்களை பாதசாரிகளுக்கு ஆபத்தான வகையில் அஜாக்கிரதையாக ஓட்ட வேண்டாம் என பலியானவர் மாணவர்களை எச்சரித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, ஒரு குழந்தையின் தந்தையை மாணவர்கள் இரக்கமின்றி கொடூரமாக தாக்கியுள்ளனர். சந்தேக நபர்கள் பாடசாலை ஒன்றின் தரம் 11 மாணவர்கள் எனவும், அதில் உயிரிழந்தவரின் மனைவி ஆசிரியை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர் வேலையின்றி இருந்ததாகவும், வெளிநாடு செல்வதற்காக காத்திருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.