சதை உண்ணும் பாக்டீரியாவால் உயிரிழந்த சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சோகம்!!

388

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் மாமிசம் உண்ணும் அரியவகை பாக்டீரியாவால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜெஸ்ஸி பிரவுன் என்ற 11 வயது சிறுவனே இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவனின் பெற்றோர்கள் பல தகவல்களை கூறியுள்ளனர். குறித்த சிறுவன் ஆரோக்கியமாக இருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த போது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

பின்பு சில தினங்களில் முழு கால்களிலும் சிராய்ப்பு போன்ற தடங்களும் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் சிகப்பு நிற புள்ளிகளும் காணப்பட்டதால் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் சோதனை செய்துள்ளனர்.

அப்பொழுது பரிசோதனையில், சிறுவனுக்கு, ஸ்ட்ரெப் – ஏ தொற்று, (அதாவது சதை உண்ணும் பாக்டீரியா) ஏற்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் கணுக்கால் சுருட்டப்பட்டிருந்ததால் அங்கு தொற்று இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென இறந்துள்ளார். அமெரிக்க குழந்தை மருத்துவர்கள், குழந்தைகளிடையே ஸ்ட்ரெப்-ஏ தொற்று சமீபத்தில் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

சிலருக்கு சுவாச தொற்றுக்கு பிறகு தான் பாக்டீரியா தாக்குகிறது. அதாவது சுவாசப்பாதை வழியாக நோய் தாக்கலாம். இந்த தொற்று மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.

குரூப்-ஏ ஸ்ட்ரெப் என்பது தொண்டை அழற்சியை ஏற்படுத்தும் பாக்டீரியா. இதனால் வரும் நோய் எல்லாமே கடுமையானவை அல்ல, ஆனால் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், சதை உண்ணும் நோய் போன்ற இரண்டாம் நிலை தொற்றுநோயை ஏற்படுத்தும் என அமெரிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வீக்கம், தோல் சிவத்தல், துர்நாற்றம், காய்ச்சல் ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகளாகும். குரூப் – ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனும் பாக்டீரியா பல்வேறு நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். இந்த நோய்த்தொற்றுகள் சிறிய நோய்கள் முதல் மிகவும் தீவிரமான மற்றும் கொடிய நோய்கள் வரை இருக்க வாய்ப்புள்ளது.